Wednesday, March 16, 2016

கலைநிகழ்ச்சிகளுக்குப் பழக்கப்பட்ட கண்கள்


@
மின்னி மின்னி எரிய வேண்டிய
மஞ்சள் விளக்கு
அணைந்து கிடக்கும் நள்ளிரவில்
அதன் தலைக்கு மேலே
மின்னிக் கொண்டிருக்குமொரு
தெருவிளக்கின் கீழே
செந்நிற அரிவாள்கள் தூரமாக
தலையும் உடலும் துண்டாகி
அனாதையாய் சாகத் தேவையில்லை.
சுபமுகூர்த்த நண்பகலில்
50 பேர் கூட கூடும் கடைவீதியில்
சாவகாசமாய் கழுத்தறுத்து,
சாவகாசமாய் புறப்படலாம் நீங்கள்.
பள்ளி கலைநிகழ்ச்சிகளுக்குப்
பழக்கப்பட்ட கண்கள்
கைத்தட்ட மறந்திருப்பது குறித்து மட்டுமாய்
ஆசுவாசப்படலாம் நாம்.
-வைகறை

1 comment:

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...