Tuesday, October 7, 2014

குட்டிமீன்


@
குட்டி மீன்
கடித்துப் போகிறது
தூண்டில்காரன் கால்களை!

@
சர்க்கஸ் சிங்கம்
வெறித்துப் பார்க்கிறது
கூண்டிற்குள் அசையும் செடியை!

@
மனிதன் நெருங்குகையில்
பறந்துவிடும் பறவைகள்
பாவம் மரங்கள்!

@
புறப்படும் நேரம்
எழுதி விட்டு வருகிறேன்
ஒரு கவிதையின் முதல்வரியை!

@
அசையும் மரத்துண்டில்
கடக்கிறது நத்தை
ஒரு பூகம்பத்தை!

@
கோடை மதியம்,
குவளையை நெருங்கும்
எறும்பும் என் தாகமும்!

@
இலையுதிர் மதியம்,
திடீர்மழையில் சருகு
கூச்சலிட்டடங்கும்!

@
ஆடிக் காற்று,
கிழிந்த காகிதம் பறக்கிறது
வண்ணத்துப்பூச்சியுடன்!

@
வேறொன்றுமில்லை,
என் கையில்
உன் கைக்குட்டை!

@
மூங்கில் காடு,
ஏதோவொரு குருவி
பதில் பாட்டிசைக்கிறது!

@
உலுக்காதே
உதிர்வதில்லை
வண்னத்துப்பூச்சிகள்!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...