@
உதிர்க்கிறாய்
ஒரு புன்னகையை,
எதுவும் எழுதாமல்
கொண்டு வந்த நான்
தோற்றுப் போகிறேன்
உன் வாசித்தலின்
முன்.
@
எனக்கான சிறகினை
என்னிடம் தருவதாய்
இருக்கிறது
உன்னுடனான
கைகோர்த்தல்.
@
இன்று வரவில்லை
என நீ
குறுஞ்செய்தியிட்ட
அந்த
மழைபெய்யும் மாலையில்
புறப்படுகிறேன்
பேருந்து நிறுத்தத்திற்கு
ஒரு தேநீரோடு
–உன்
நினைவுகளை அருந்திவர.
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...