Tuesday, October 7, 2014

கைகோர்த்தல்


@
உதிர்க்கிறாய்
ஒரு புன்னகையை,
எதுவும் எழுதாமல்
கொண்டு வந்த நான்
தோற்றுப் போகிறேன்
உன் வாசித்தலின் முன்.


@
எனக்கான சிறகினை
என்னிடம் தருவதாய் இருக்கிறது
உன்னுடனான
கைகோர்த்தல்.


@
இன்று வரவில்லை
என நீ
குறுஞ்செய்தியிட்ட அந்த
மழைபெய்யும் மாலையில்
புறப்படுகிறேன்
பேருந்து நிறுத்தத்திற்கு
ஒரு தேநீரோடு –உன்
நினைவுகளை அருந்திவர.

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...